ராணிப்பேட்டையில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. குழந்தை உயிரிழப்பு.!

0 3108

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு, கணவர் பிரசவம் பார்த்ததாக கூறப்படும் சம்பவத்தில், குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி கோமதி கருவுற்றிருந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி பிரசவத்திற்கு நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் கோமதிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் லோகநாதன் தனது சகோதரி கீதா உதவியுடன் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படும் நிலையில், இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய நிலையில் இருந்த கோமதிக்கு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments